CRIME
ஐயோ..! ஹோம் ஒர்க் எழுதலன்னு இப்படியா..? ஆசிரியரின் வெறிச் செயலால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..!!
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக வகுப்பாசிரியர் நடத்திய கடுமையான தாக்குதலால் 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்பறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பாடம் எழுதவில்லை என்ற சிறு காரணத்திற்காக ஒரு பிஞ்சுப் பாலகன் மீது ஆசிரியர் காட்டிய இந்த கொடூர வன்முறை, பள்ளிச் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் மனநிலை குறித்த மிகப்பெரிய அதிர்ச்சியையும் கண்டனங்களையும் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
Vishakhapatnam, Andhra Pradesh
A woman teacher beat a 6 year old boy for not completing homework.
The boy collapsed after a few slaps and was rushed to the hospital.
The school management didn’t inform his parents.
Sadly, he died.
The family members of the boy demanded the… pic.twitter.com/fQOuArQIDJ— ︎ ︎venom (@venom1s) August 20, 2026
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவத்தைக் கண்டித்து மாணவரின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்; குழந்தையைத் தாக்கிய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
