LATEST NEWS
“இனி ரேஷன் கார்டு தேவையில்லை..” அமைச்சர் வெளியிட்டஅசத்தல் அறிவிப்பு… குஷியில் பொதுமக்கள்..!!!
ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க இனி அசல் ரேஷன் அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அசல் அட்டைக்கு மாற்றாக, ரேஷன் கார்டின் மென்பொருள் நகல் அல்லது ரேஷன் அட்டை எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகக் காண்பித்து பொதுமக்கள் தங்களுக்குரிய பொருள்களை இனி எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் அட்டை தொலைந்துபோனவர்களுக்கும், அசல் அட்டையை உடனடியாக எடுத்துச் செல்ல மறப்பவர்களுக்கும் இந்த புதிய நடைமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இதனுடன், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள பெரிய ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக 150 கடைகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள கடைகளை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், நுகர்வோர் சிரமமின்றி விரைவாகப் பொருள்களை வாங்க முடியும். இந்த இரண்டு அறிவிப்புகளும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை எளிமையாக்குவதோடு, பொதுமக்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
