LATEST NEWS
“அவன் இல்லாம நான் வாழ மாட்டேன்…” காதலன் இறந்த செய்தி கேட்டதும் காதலி செய்த காரியம்..! பெற்றோர் சொன்ன ஒரே வார்த்தை..! 24 மணி நேரத்தில் முடிந்த இரு உயிர்கள்..! ஆந்திராவில் நடந்த சோகம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசியாகர மாவட்டத்தில் உள்ள குர்லா மண்டலத்திற்குட்பட்ட கோட்டாகந்திரேடு கிராமத்தைச் சேர்ந்த வோனிவி தேவகிநந்தன் என்ற வாலிபரும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். தேவகிநந்தன் தனது காதல் குறித்து பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து, இரு குடும்பத்தாரும் திருமணம் தொடர்பாகப் பேசி வந்தனர். ஆனால், பெண் இன்னும் சிறியவள் என்பதால் திருமணத்திற்குச் சிறிது காலம் அவகாசம் வேண்டும் என தேவகிநந்தனின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு காவல் நிலையம் வரை சென்று பின்னர் கிராம பெரியவர்களின் தலையீட்டால் அமைதியானது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பெண்ணின் பெற்றோர் தேவகிநந்தனின் வீட்டிற்குச் சென்று உடனே திருமணத்தை நடத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். அதற்கு தேவகிநந்தன் தரப்பில் மீண்டும் அவகாசம் கேட்டதால், இரு குடும்பத்தாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த தேவகிநந்தன், நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, தங்களது கட்டுமானப் பணியில் இருந்த புதிய வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தேவகிநந்தனின் பெற்றோர் அப்பெண்ணின் குடும்பத்தினர்தான் அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டியதால் அங்குப் பதற்றம் நிலவியது.
காதலன் தேவகிநந்தன் தற்கொலை செய்துகொண்ட செய்தியைக் கேட்ட அப்பெண், அந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் தாங்க முடியாமல் அடுத்த நாள் அதிகாலையில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 24 மணி நேரத்திற்குள் காதலர்கள் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்து வந்த குர்லா காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வாக்குவாதம் குறித்து இரு குடும்பத்தாரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
