CRIME
“அடக் கொடுமையே..” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 75 வயது முதியவர் செய்த ‘அந்த’ அநாகரீகச் செயல்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொத்தபொம்மாளி மண்டலத்திற்கு உட்பட்ட குஞ்சிலோவா கிராமத்தில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரில் 75 வயது முதியவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முதியவர் காவிதி ராமராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும், இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 75 வயது முதியவர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
