LATEST NEWS
“இது நியாயமா ஐயா?” – ராமதாஸிடம் புலம்பிய ஸ்ரீகாந்தி.. அன்புமணி காட்டிய கறார் முகம்.. கசிந்த ரகசியத் தகவல்.. அரசியலில் அடுத்த புயல்..!!
ராமதாஸுடன் ஸ்ரீகாந்தி இணைந்ததைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சிக்குள் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீகாந்தி மற்றும் ஜி.கே.மணி ஆகிய இருவரையும் கட்சிக்குள் சேர்க்கக் கூடாது என்பதில் அன்புமணி ராமதாஸ் மிகவும் கறாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீகாந்தி, கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் தனது வேதனையைப் பகிர்ந்து புலம்பியதாகத் தெரிகிறது. கட்சியின் இக்கட்டான மற்றும் நெருக்கடியான சூழல்களிலெல்லாம் தான் உறுதுணையாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், இப்போது தன்னையும் தனது ஆதரவாளர்களையும் இப்படி ஓரம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று ராமதாஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அன்புமணிக்கு ஆதரவாகவே ராமதாஸ் காய் நகர்த்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்தியின் குமுறல்களைக் கேட்ட போதிலும், கட்சியின் எதிர்காலம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் அனைத்தும் அன்புமணியைச் சுற்றியே அமையும் என்பதை ராமதாஸ் அவரிடம் திட்டவட்டமாக உணர்த்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அன்புமணியின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்ற ரீதியில் ராமதாஸ் பதில் அளித்ததால், ஸ்ரீகாந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்போது அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் கடும் அதிருப்தியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
