LATEST NEWS
பாமகவில் வெடித்த அதிருப்தி..! “ராமதாஸை நம்பி ஏமாந்த பாமகவினர் கடனாளியாகிவிட்டனர்” நட்டாற்றில் விட்டுவிட்டார்… முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அதிரடி புகார்..!!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே சமீபத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ராமதாஸின் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் சேலத்தில் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கட்சியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. அருள், தலைவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சுமுக உறவு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “ராமதாஸும் அன்புமணியும் ஓராண்டுக்கு முன்பே இணைந்திருந்தால், பாமகவினர் இந்த அளவுக்குக் கடனாளிகளாக மாறியிருக்க மாட்டார்கள்” என்று அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராமதாஸை முழுமையாக நம்பிப் பணத்தைச் செலவு செய்த கட்சியினரை அவர் பாதியில், நட்டாற்றில் விட்டுவிட்டதாகக் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார், இது பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
