LATEST NEWS
“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” GT அணியிடம் கேப்டன் பதவி கேட்ட ஹர்திக் பாண்டியா… முகத்திலடித்தாற்போல் ‘நோ’ சொன்ன நிர்வாகம்..!!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது பழைய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டனான அவர், மீண்டும் குஜராத் அணிக்கு மாற விரும்பிய இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குள் நுழைவதை குஜராத் அணியின் தற்போதைய கேப்டனான சுப்மன் கில் மற்றும் அணி நிர்வாகம் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு, அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையின் போது, தான் மீண்டும் குஜராத் அணிக்குத் திரும்பினால் “கேப்டனாக மட்டுமே வருவேன்” என்ற புதிய மற்றும் கடுமையான நிபந்தனையை ஹர்திக் பாண்டியா முன்வைத்துள்ளார். இந்த நிபந்தனை இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் பெரும் சிக்கலை உருவாக்கியது.
சுப்மன் கில்லை கேப்டன் பதவியிலிருந்து நீக்க விரும்பாத குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவி கோரிக்கையை உடனடியாகவும் அதிரடியாகவும் நிராகரித்துவிட்டது. சுப்மன் கில்லை தங்களது நீண்ட கால கேப்டனாகக் கருதுவதாலும், இந்த நிபந்தனைக்கு உடன்பட முடியாததாலும் இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை முற்றிலும் முறிவடைந்தது. இதன் காரணமாக அவர் மீண்டும் தனது பழைய அணிக்குத் திரும்பும் வாய்ப்பு முற்றிலும் கைநழுவிப் போயுள்ளது.
