CRIME
“கணவன் பாலியல் வெறி பிடித்த மனநோயாளி..!” நண்பர்களிடம் கதறிய மனைவி… உடலுறவுக்கு மறுத்ததால் நடந்த விபரீதக் கொலை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
தென் கொரியாவில் திருமணமான மூன்றே மாதங்களில் 35 வயதுப் பெண் யூ ஹே-யங், அவரது கணவர் சியோவால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பரில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினரிடையே, சியோவின் பாலியல் வற்புறுத்தல்கள் காரணமாகத் தொடர் பிரச்சனைகள் இருந்துவந்துள்ளன. மனைவியின் உடல்நலக் குறைவு மற்றும் கருச்சிதைவு அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அவரது விருப்பத்திற்கு மாறாக சியோ தொடர்ந்து உடலுறவுக்கு வற்புறுத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மனைவியின் மாதவிடாய் காலத்தில் சியோவின் பாலியல் அணுகுமுறையை யூ மறுத்ததால் ஆத்திரமடைந்த சியோ, அவரை மூச்சுத்திணறச் செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் யூவின் உதடு மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொலையைச் செய்துவிட்டு மனைவியின் இறுதிச் சடங்கில் ஒன்றுமறியாதது போல் கலந்துகொண்ட சியோ, காவல்துறையின் தீவிர விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு நீண்டகாலமாக இருந்த பாலியல் மோகத்தால், மனைவியின் மறுப்பை அவமானமாகக் கருதியதே இந்தக் கொலைக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறப்பதற்கு முன்பாகத் தனது கணவரை பாலியல் வெறியன் என்று குறிப்பிட்ட யூ, அவரைத் திருமணம் செய்ததற்காக வருந்தியதோடு விவாகரத்து பெறவும் முடிவு செய்திருந்தார் என்பது அவரது நண்பர்களின் குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. அக்கம் பக்கத்தினரின் சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், காவல்துறையினர் இறுதிச் சடங்கு நடந்த இடத்திலேயே சியோவைக் கைது செய்தனர். இந்த வழக்கில் சியோ தற்போது கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
