LATEST NEWS
டிரம்பைக் கொல்ல சதியா?.. “1000 ஏவுகணைகள் தயார்!” ஈரானை உலக வரைபடத்திலிருந்தே தூக்க முடிவு..! நடுங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே போர் பதற்றம் மூண்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்கா கடுமையான குண்டுவீச்சை நிகழ்த்தியது. இதற்குப் பதிலடியாக, வளைகுடாப் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதால் நிலைமை மீண்டும் மோசமடைந்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் வழங்கிய உளவுத்துறை தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை எவ்வித இடையூறுமின்றி அனுமதிக்க வேண்டும் எனவும், தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் ஈரானுக்கு அமெரிக்கா 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும், அமைதி முயற்சிகள் பலனளிக்காத பட்சத்தில் மாற்றுத் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தன் மீது ஏதேனும் தாக்குதல் முயற்சியோ அல்லது படுகொலை சதியோ நடந்தால், ஈரானை முற்றிலுமாக அழிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை வீச ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தாலும், நிரந்தர அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கேற்ப, இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தில் அணுசக்தி குறித்த புதிய கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
