காலையிலேயே ஹாப்பி நியூஸ்.. பிறந்த வீட்டு ஆடி சீராக ₹2,500.. தமிழக பெண்களுக்கு CM விஜய் கொடுக்கப்போகும் மெகா கிப்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலையிலேயே ஹாப்பி நியூஸ்.. பிறந்த வீட்டு ஆடி சீராக ₹2,500.. தமிழக பெண்களுக்கு CM விஜய் கொடுக்கப்போகும் மெகா கிப்ட்..!!

Published

on

மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பது தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யவும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய சமூக நலத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகப் பெண்களுக்குப் பிறந்த வீட்டு ஆடி சீராக இந்தத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை இம்மாதமே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு செய்யும் ஒரு முக்கிய உதவியாக இருக்கும் என்று தமிழக மகளிர் பெரும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர். அதேநேரம், இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடப்பு ஜூலை 16-ஆம் தேதி ஆடி மாதம் பிறப்பதால் அன்றைய தினமே இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா, அல்லது ஆடி மாதத்தின் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு (ஆகஸ்ட் 3) அன்று அறிவிப்பு வெளியாகுமா என்ற விவாதங்கள் பரவலாக எழுந்துள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழக அரசு வெளியிடவுள்ள இந்த அதிரடி அறிவிப்பைக் கொண்டாட ஒட்டுமொத்தப் பெண் பயனாளிகளும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in