LATEST NEWS
விஜய் சொன்ன ‘அந்த’ வார்த்தை… அம்மா வேடமே வேண்டாம் என ஓடிய ரோஜா..! 12 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, தான் ஏன் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்தேன் என்பது குறித்த சுவாரஸ்யமான பின்னணியை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யின் ‘காவலன்’ திரைப்படத்தில் நடிகை அசினுக்கு அம்மாவாக ரோஜா நடித்திருந்தார். அந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரோஜாவைப் பார்த்த விஜய், “நீங்களா அம்மாவாக நடிக்கிறீர்கள்?” என்று நம்ப முடியாமல் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்.
விஜய் போன்ற ஒரு முன்னணி ஹீரோவே ஆச்சரியப்பட்டு அப்படிக் கேட்டதும், ‘நாம் தவறான வயதில் அம்மா கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறோமோ’ என்ற சந்தேகம் ரோஜாவிற்குள் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, அதன் பிறகு திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடிப்பதை அவர் முழுமையாகத் தவிர்த்துவிட்டு, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ள ரோஜா, ‘அன்பே டயானா’ மற்றும் ‘லெனின் பாண்டியன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் சென்னையில் குடியேறிய ஒரு தெலுங்கு குடும்பத்து அம்மாவாக, தனது நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து மிகவும் ரசித்து நடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் ஆந்திர அரசியலில் வெற்றி பெற்றதற்கு சினிமாவே முக்கியக் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ள அவர், இனி வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
