LATEST NEWS
“அடேங்கப்பா… டிராக்டரே கலங்கிடுச்சு… இ-ரிக்ஷாவை வச்சு விவசாயம் செய்த நம்ம ஊரு விஞ்ஞானி..! நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ..!!”
பொதுவாகப் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இ-ரிக்ஷா, தற்போது விவசாய நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடினமான மண் பகுதியை உழுவதற்கு அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இந்த இ-ரிக்ஷாவை வைத்து ஒரு நபர் செய்துள்ள “தேசி ஜுகாட்” இணையவாசிகளைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், வயல்வெளியின் நடுவே ஒரு இ-ரிக்ஷா நிற்கிறது. அதன் பின்புறத்தில் நிலத்தை உழுவதற்குப் பயன்படும் விவசாயக் கருவி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்த இ-ரிக்ஷா முன்னோக்கி நகர நகர, அதன் பின்னே இருக்கும் கருவி மண்ணைத் தோண்டி அழகாக உழுதுகொண்டே செல்கிறது. டிராக்டர்களுக்கு மாற்றாக மிகக் குறைந்த செலவில் இந்த வாகனம் வயலை உழுவதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், “இந்தியர்களின் திறமைக்கும் மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதற்கும் இதுவே சிறந்த உதாரணம்; உண்மையான செயற்கை நுண்ணறிவு இதுதான்” எனப் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இ-ரிக்ஷா போன்ற இலகுரக வாகனங்கள் இது போன்ற கடினமான வேலைகளுக்காகத் தயாரிக்கப்படாததால், இதனைத் தொடர்ந்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவது வாகனத்தின் ஆயுளைப் பாதிக்கும் என்றும் சிலர் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
