LATEST NEWS
ஐய்யோ.. உங்க பேங்க் அக்கவுண்டுல 1,000 ரூபாய் இன்னும் வரலையா..? பயப்பட வேண்டாம்… வங்கி கணக்கில் உடனே இதை செக் பண்ணுங்க..!!
தமிழக மகளிர் உரிமைத்தொகையின் 36-வது தவணை பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த மாதங்களில் தொடர்ந்து ரூ.1,000 பெற்று வந்த பல பயனாளிகளுக்கு, இம்முறை தற்போது வரை பணம் வரவு வைக்கப்படவில்லை என்று அவர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பயனாளிகள் யாரும் தகுதியிழப்போ அல்லது திட்டத்திலிருந்து நீக்கப்படவோ இல்லை என்பதை தெளிவுபடுத்தப்படுகிறது. ஒருவேளை வங்கியின் சர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பணம் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது உங்களது வங்கிக் கணக்கில் KYC புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம். எனவே, பணம் வரப்பெறாத பயனாளிகள் தங்களின் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளை உடனே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
