LATEST NEWS
அடடே… கிராம மக்களுக்கு சூப்பர் செய்தி..! இனி சிலிண்டர் புக்கிங் செய்ய 45 நாள் காக்க வேண்டாம்… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்ட அந்த ‘ஹாட்’ அப்டேட்..!!
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வீட்டு சிலிண்டர் புக்கிங் செய்வது தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி காலம் 45 நாள்களில் இருந்து 25 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றத்தின் மூலம், கிராமங்களில் உள்ளவர்கள் இனி 25 நாள்களுக்குப் பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். அதேவேளையில், நகரங்களைப் பொறுத்தவரையில் சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி காலம் ஏற்கனவே உள்ளபடி 25 நாள்களாகவே தொடர்ந்து நீடிக்கிறது.
