LATEST NEWS
மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் சிம்பு…! “அதுவும் தேசிய விருது பெற்ற டைரக்டர் உடன்”…?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கிற்கு வருவதில்லை என்று அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இந்நிலையில், பல சர்ச்சைக்கு பின் மீண்டும் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் தொடங்கிவிட்டார்.நடிகர் சிம்பு .
படப்பிடிப்பின் இடைவேளையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிம்பு, தொடர்ந்து நடிப்பேன் என ரசிகர்கள் முன்னிலையில் வாக்குறுதி கொடுத்தார். அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுவும் இந்த படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ளாராம். இதன் காரணமாகவே மாநாடு பட பூஜையில் கலந்து கொண்ட சேரன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்ததாகா சொல்லப்படுகிறது.
சிம்பு, விஜய் சேதுபதி ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
