LATEST NEWS
“தப்பி ஓடியது யார்..?” சிபிஐ விசாரணையில் முதல்வர் விஜய்க்கு அதிரடி சவால் விட்ட செந்தில் பாலாஜி..! கரூரில் பற்றி எரியும் அரசியல் அனல்..!!!
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் இடையே நேரடி அரசியல் மோதல் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தற்போது சிபிஐ விசாரணைக்குச் சென்றுள்ளது. இந்த வழக்கில், கரூரைத் தனது கோட்டையாகக் கொண்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக தவெக தரப்பு பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக, நெரிசல் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்றதும், அவரது அறக்கட்டளை முத்திரை பதிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் அங்கு விநியோகிக்கப்பட்டதும் இது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை தவெக தரப்பில் எழுப்பியுள்ளது.
தவெக தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள செந்தில் பாலாஜி, மிகக் கடுமையான பதிலடிகளைத் தந்துள்ளார். தவெக தலைவர் விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்றும், விழா ஏற்பாட்டாளர்கள் போதிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்யவில்லை என்றும் அவர் சிபிஐ விசாரணையில் வாதிட்டுள்ளார். மேலும், கரூரில் ஆபத்து காலத்தில் களத்தில் நின்று மக்களைக் காப்பாற்றியது யார், விமான நிலையம் வழியாகத் தப்பி ஓடியது யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறி முதலமைச்சர் விஜய்க்கு செந்தில் பாலாஜி நேரடி சவால் விடுத்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையேயான இந்த மோதல் விபத்து வழக்கோடு மட்டும் நின்றுவிடாமல், தற்போது புதிய அரசியல் திருப்பத்தை எட்டியுள்ளது. தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் பேசி, அரசை கவிழ்க்க சதி செய்ததாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் மீது தவெக அரசு புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கில், சுமார் 180 கோடி ரூபாய் வரை தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் சட்ட நடவடிக்கைகளும், கைது முயற்சிகளும் முதலமைச்சர் விஜய் மற்றும் திமுகவினர் இடையே பெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளன.
