CRIME
“நான் எந்த தப்பும் செய்யல!”.. திட்டமிட்டு பழிவாங்குகிறாரா CM விஜய்?.. தவெக அரசை அதிரடியாக சாடிய திமுக முன்னாள் அமைச்சர்.. தமிழக அரசியலில் பூகம்பம்..!!
சிங்கப்பூர் மருத்துவப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்குத் தொடர்பாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜரானார். ஆலந்தூர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்குத் தனக்குத் தெரிந்த உண்மைகளைப் பதில்களாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். மேலும், சட்டப்பூர்வமான இந்த விசாரணைக்குத் தான் முழுமையாக ஒத்துழைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நீதிமன்றத்தின் ஆணையை ஏற்றுத் தான் ஆஜராகியுள்ளதாகவும், இந்த முறைகேடு வழக்கில் தான் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். “எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை; எப்போது அழைத்தாலும் விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன்” என்று அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிவித்த அவர், தவெக அரசு திட்டமிட்டுத் தன்னை இந்த வழக்கில் இணைத்துள்ளதாகக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு வரும் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதால், நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாக எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
