LATEST NEWS
“யார் அந்த மேலிடப் புள்ளி…?” பழனி முருகன் கோயில் ரூ.100 கோடி நிலம் மோசடி… உயர் நீதிமன்ற விசாரணை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!!
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, சட்ட விதிகளுக்கு மாறாக 3 தனி நபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்தது எப்படி என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மெகா நில மோசடி விவகாரத்தில் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் மற்றும் அதிகார மட்டத்திலுள்ள ‘மேலிடப் புள்ளிகளின்’ பலத்த ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆன்மீகச் சொத்துக்கள் இவ்வாறு முறைகேடாகக் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க, இந்த நில மோசடி விவகாரத்தை உயர் நீதிமன்ற நீதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் பின்னணியில் இருந்து செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்படச் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
