LATEST NEWS
BREAKING: சற்றுமுன் கொத்தாக கைது.. முதல்வர் விஜய் காலையிலேயே முரட்டு சம்பவம்…!!
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில், தமிழக காவல் துறையினர் மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனைகளில் ஒரே வாரத்தில் 822 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த மாபெரும் ஒடுக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள மாநகர காவல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் நேரடி மேற்பார்வையில் இந்த சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது.
இப்பயங்கர அதிரடி சோதனையின் போது, சட்டம்-ஒழுங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து ஒட்டுமொத்தமாக 22,519 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்கள் பிடிபட்டதுடன், ஜூலை 8 முதல் ஜூலை 14 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பிணையில் வெளிவர முடியாத 2,648 பழைய பிடியாணை உத்தரவுகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது
