LATEST NEWS
“எதுக்கு இந்த வேண்டாத வேலை..! ரீல்ஸ் எடுக்குறன்னு தூங்கும் நாயை வம்புழுத்த இளம்பெண்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா..?!”
மலைப்பகுதிக்குச் சுற்றுப்பயணம் சென்ற பெண் ஒருவர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஒரு நாயுடன் அழகிய வீடியோ எடுக்க முயன்றபோது, நாய் திடீரெனக் குரைத்து அவரது கையைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விலங்குகளிடம் பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறு நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் கவனம் ஈர்ப்பதற்காகப் பலர் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு, உடனடியாக அதன் விளைவையும் சந்திக்கின்றனர். அமைதியான சூழலுடன் தொடங்கும் இந்த வீடியோவில், சுற்றிலும் பசுமை படர்ந்த மலைப்பகுதியின் அழகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவின் அடுத்த பகுதியில், புல்வெளியில் ஒரு நாய் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த நாயுடன் சேர்த்து வீடியோ எடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் என நினைத்த அந்தப் பெண், மெதுவாகச் சென்று நாயின் அருகில் அமர்கிறார். சில வினாடிகள் கேமராவைப் பார்த்துப் புன்னகைத்தபடி புல்வெளியில் படுத்து வீடியோ எடுக்கத் தொடங்கும் அவர், அன்பை வெளிப்படுத்தும் விதமாக நாயின் முகத்தைத் தொட முயல்கிறார். ஆனால், அந்நியர் ஒருவர் திடீரெனத் தொட்டதை விரும்பாத அந்த நாய், சட்டென்று விழித்து உரக்கக் குரைத்தவாறு அவரது கையைப் பற்றிக் கடிக்கப் பாய்கிறது.
https://www.instagram.com/reel/Da7SNBSSTwu/?utm_source=ig_web_button_share_sheet
திடீரென நடந்த இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பயந்து நடுங்க, அவரிடமிருந்த கைப்பேசியும் புல்வெளியில் நழுவி விழுகிறது. இதனால் கேமராவின் கோணம் மாறி, அவருக்குக் காயம் எந்த அளவுக்கு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவரது பயக் கூச்சல் மட்டுமே கேட்கிறது. இந்த அரைகுறை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ shwetaastic என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
