“இனிமே இந்த பக்கமே வரக்கூடாது…” நடுரோட்டுல திருநங்கைகள் பண்ண ரகளை.. ஆளந்தி நதிக்கரையில் நடந்த ரணகளம்.. பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனிமே இந்த பக்கமே வரக்கூடாது…” நடுரோட்டுல திருநங்கைகள் பண்ண ரகளை.. ஆளந்தி நதிக்கரையில் நடந்த ரணகளம்.. பகீர் வீடியோ..!!

Published

on

பூனே மாவட்டம் கேட் தாலுகாவிலுள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ஆளந்தியின் இந்திராயணி நதிக்கரையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 1 மணி அளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திருநங்கைகளின் இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பக்தர்களிடம் தர்மம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறே இந்த வன்முறைக்குக் காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆளந்தி காவல் நிலைய ஆய்வாளர் பீமா நார்கே வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

புகார்தாரரான யோகேஷ் சதீஷ் கணமோடே மற்றும் அவரது நண்பர்கள் நதிக்கரையில் தர்மம் கேட்டுக்கொண்டிருந்தபோது, நிக்டி பகுதியைச் சேர்ந்த பாரி யாதவ், சனம், குஷி, ராணி மற்றும் அஞ்சலி ஆகிய ஐந்து பேர் கொண்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறியதில், யோகேஷ் என்பவரது தலையில் இரும்பு பஞ்ச் ஆயுதத்தால் தாக்கப்பட்டதுடன், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோதலின் போது இரு நபர்க அறியப்படாத நிலையில், மொத்தம் 7 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வன்முறை மோதலின் போது ஏற்பட்ட கூச்சலிலும் குழப்பத்திலும், யோகேஷ் மற்றும் அவரது நண்பர்களான பிரஷாந்த் மற்றும் சுவாதி ஆகியோரின் தாலிச் சங்கிலிகள் மற்றும் இரண்டு கைபேசிகள் காணாமல் போயுள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மின்னணு ஆதாரங்களைச் சேகரித்து ஆளந்தி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இதுவரை யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in