LATEST NEWS
56 வயதில் 23 வயதான இளம் பெண்ணை….. 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்….. யாருனு நீங்களே பாருங்க….!!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே.. என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகர் பப்லு. சீரியல் மட்டுமல்லாமல் ‘வாணி ராணி’ உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அஜித் மற்றும் சிம்ரன் நடித்திருந்த ‘அவள் வருவாளா’ என்ற திரைப்படத்தில் கூட சிம்ரனுக்கு கணவராக இவர் நடித்திருப்பார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
இப்போதும் நான் ஆரோக்கியமாக இருக்க காரணம் என் மனைவி தான் என்று ஒரு இளம் பெண்ணை மேடை ஏற்றினார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் பப்லுவுக்கு ஏற்கனவே பீனா என்பவருடன் திருமணமாகி 25 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரின் மகன் அஹத் ஆட்டிசம் குறைபாடு உடையவர். இந்நிலையில் இவர் ஒரு இளம் பெண்ணை மனைவி என்று கூறியது பலரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு வெளியான தகவலில் பப்ளு மற்றும் அவரின் மனைவி பீனா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் . அந்த சமயத்தில் பப்லுவுக்கு மலேசியாவை சேர்ந்த இந்த பெண்ணுடன் நட்பாகி பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
