தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.

மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான மணி சித்திரதாஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது..

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்தது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அத்திந்தோம் என்ற பாடலை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அந்த பாடலில் ரஜினிகாந்துடன் சேர்ந்து பொம்மி என்ற குழந்தை நடனமாடியிருப்பார். அந்த குழந்தையை பெயர் பிரஹர்ஷிதா.

இவர் அதற்கு முன்னதாக வேலன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

இவர் தமிழில் பல படங்களில் சாமி வேஷத்திலும் நடித்துள்ளார். இவர் படங்களில் மட்டுமல்ல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு வளர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். பின்னர் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகிய இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீனிவாசன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவர் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த பலரும் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மி இப்போது மம்மி ஆகிவிட்டார் என்று கூறி வருகிறார்கள். அவர்களின் குடும்ப புகைப்படங்கள் இதோ…
