CINEMA
கணவருடன் விவாகரத்து?.. அடையாளம் தெரியாத நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுவாதி.. ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி. அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடகறி மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தன்னுடைய 17 வயதில் கலர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதல் வருட கல்லூரி வாழ்க்கையை முடித்த போது சினிமாவில் அறிமுகமானார்.
டேஞ்சர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பின்னணி பாடகி ஆகவும் திகழ்கிறார். ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார்.இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்த சுவாதி திடீரென அந்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதனால் திருமண புகைப்படத்தை அவர் டெலிட் செய்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
இப்படி விவாகரத்து சம்மந்தமான பிரச்சனை இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது சுவாதி அடையாளம் தெரியாத ஒரு நபருடன் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க