LATEST NEWS
70 வயதில் கழுத்தில் மாலையுடன்…. திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் காமெடி என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது கவுண்டமணி செந்தில் காமெடி தான். இவர்களை காமெடியில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
அப்படி தன்னுடைய நகைச்சுவையான பேச்சாள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் செந்தில்.
90களில் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்ட இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகியுள்ளார்.
இவர் மீண்டும் சினிமாவில் களமிறங்க வேண்டுமென ரசிகர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 70 வயதாகும் செந்தில் கழுத்தில் மாலையும் கையும்மாக கோவிலுக்கு சென்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
அந்த கோவிலுக்கு சென்ற நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70 வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செந்தில் அவரின் மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, நிதிரி பிரபு மற்றும் குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரவு கஜ பூஜை,கோ பூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டு கால யாகசாலை பூஜையில் குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் 64 கலசங்கள் வைக்கப்பட்டு முதல் காலையாக சாலை இரவு நடைபெற்றது.
பிறகு ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்த பிறகு பீமரத சாந்தி என்று அழைக்கப்படும் எழுபதாவது திருமணம் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.