LATEST NEWS
இப்படி கூடவா பண்ணுவாங்க?…. கணவருடன் விவாகரத்து பெற்றதை கொண்டாடிய சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!
பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவரான ஷாலினி என்ற நடிகை தான் விவாகரத்து பெற்றதை வெளிப்படையாக அறிவித்து அதனை போட்டோ சூட் நடத்தி கொண்டாடியுள்ளார். பொதுவாகவே நடிகைகளை விவாகரத்து பெற்றால் அந்த செய்தியை பெரிதாக பேசப்படாது. ஆனால் நடிகை ஷாலினி தான் விவாகரத்து பெற்றதை பலவிதமாக கொண்டாடியுள்ளார்.
அவர் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் தனது கணவர் துன்புறுத்துவதாக கூறி ஷாலினி விவாகரத்து பெற்றுள்ளார். முள்ளும் மலரும் தொடர் மூலம் பிரபலமான இவர் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்றதை கொண்டாடும் விதமாக திருமண போட்டோவை கிழிப்பது, கையில் மது பாட்டில் உடன் போஸ் கொடுப்பது என பலவிதமாக போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கருத்துக்களையும் பெற்று வருகிறது.
