கையில் குழந்தையுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா…. வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கையில் குழந்தையுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா…. வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா. உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்ட இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

கண்ணான கண்ணே என்ற பாடலை பாடி instagram பக்கத்தில் பதிவிட்ட போது ஒரு ரசிகையாக இந்த பாடலை பாராட்டி ஜெஸ்ஸி என்பவர் பதிவு போட்டார்.

Advertisement

அதற்கு அஜய் கிருஷ்ணா நன்றி தெரிவித்த நிலையில் அப்படியே இருவரும் பேசி பழகி காதலிக்க தொடங்கினர்.

பின்னர் நாளடைவில் திரு வீட்டார் சம்பந்தத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்கள்.

திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து இருவரும் வெளியேறிய நிலையில் சூழ்நிலை காரணமாக வெளியேறுவதாக தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் தனது மனைவி பிரசவ வழியில் துடைத்தது முதல் கையில் குழந்தையை பெற்ற தருணம் வரை வீடியோவாக அஜய் கிருஷ்ணா பகிர்ந்திருந்தார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

Advertisement

இந்நிலையில் அஜய் கிருஷ்ணா கையில் குழந்தையுடன் தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in