Uncategorized
அம்மா, அப்பா 2 பேருக்கும் கொரோ னா பாஸிட்டிவ்..! 6 மாத குழந்தையை தத்தெடுத்து, தற்காலிக அம்மாவான பெண் டாக்டர்…!
தற்போது உள்ள நிலையில் உலகம் முழுதும் உள்ள மக்கள் அனைவரும் அ ச்ச த்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு கரணம் தற்போது பரவி வரும் கொரோ னா வைரஸ் தான். இந்நிலையில் ஹரியானாவில் செவிலியர்களாக பணிபுரிந்து வந்த கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு 2 வயது மகள் மற்றும் 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது. துரதிஷ்டவசமாக 2 வாரங்களுக்கு முன்பு அக்குடும்ப தலைவருக்கு கொரோ னா தொற்று ஏற்பட்டு, ஹரியானாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன் குழந்தைகளுக்கு எவ்வித ஆ பத் தும் வர கூடாது எண் ணிய அவரின் மனைவி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கேரளா வந்தடைந்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட அப்பெண்மணிக்கு கொரோ னா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனது 2 வயது மகளைத் தனது தாயாரிடம் அப்பெண் ஒப்படைத்து மருத்துவ சி கிச் சையில் உள்ளார். ஆனால் அவருடைய 6 மாத ஆண் குழந்தைக்கு கொரோ னா நெகட்டிவ் ஆகியுள்ளது. இந்நிலையில் அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொ ள்ள யாரேனும் தன்னார்வலர் வேண்டும் என எர்ணாகுளம் குழந்தைகள் நல வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கொச்சியைச் சேர்ந்த மருத்துவர் மேரி அனிதா (48) என்ற பெண் குழந்தையைப் பராமரிக்க முன்வந்தார்.
அவரின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் மேரி அனிதா முழு நேரமும் குழந்தையுடன் தன் நேரத்தை செலவழித்து வருகிறார். மேலும் அப்பா அம்மாவின் ஞாபகத்தில் அ ழுத அந்தக் குழந்தை தற்போது அனிதாவிடம் நன்றாகப் பழகிவிட்டது. மேலும் இருவரும் பொம்மைகளை வைத்து விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
