Uncategorized
“திருச்சிற்றம்பலம்” படத்திற்கான தேசிய விருதோடு தாய், தந்தையுடன் நித்யா மேனன்…. குவியும் வாழ்த்துக்கள்…!!
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த அசத்தியிருந்தார்.
இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த தேசிய விருதுடன் தன்னுடைய பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நித்யா மேனன். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.