Uncategorized
காட்டாற்று வெள்ளத்தில் “தார்” காரோடு கெத்து காட்டிய இளைஞர்கள்.. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் காட்சி..!!
டார்ஜிலிங்கில் உள்ள பாலாசன் ஆற்றில் இளைஞர்கள் சிலர் தங்களின் தார் காரை ஓட்டி அலட்சியமாக விளையாடிய விபரீதம், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, சில இளைஞர்களும் யுவதிகளும் தங்களது தார் வாகனத்தை ஆற்றின் நடுப்பகுதிக்கு ஓட்டிச் சென்று, வேகமாக ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் முன்னும் பின்னுமாக இயக்கி சாகசம் செய்ய முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றின் நீர்மட்டம் திடீரென மிக வேகமாக உயரத் தொடங்கி, திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற சூழல் உருவானது.
கண் இமைக்கும் நேரத்தில், அந்த தார் வாகனம் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. வெள்ளத்தின் வேகம் அதிகரித்ததால், காரை அங்கிருந்து நகர்த்த முடியாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த இளைஞர்களும் பெண்களும், தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எப்படியோ காரின் ஜன்னல் வழியாக வெளியேறி, அதன் கூரையின் மீது ஏறி தஞ்சம் புகுந்தனர்.
https://twitter.com/KishorJoshi02/status/2077266169229390177/video/1
அந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அசாத்திய துணிச்சலைக் காட்டினார். சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீரிலும் தைரியமாகச் செயல்பட்ட அவர், ஒரு கயிற்றின் உதவியோடு காரின் மேல் தவித்துக்கொண்டிருந்த அனைவரையும் ஒவ்வொருவராக மீட்டு, பத்திரமாக கரைக்குக் கொண்டு சேர்த்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
