LATEST NEWS
குஷியோ குஷி..! மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… காலையிலேயே வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
தமிழகத்தில் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய விண்ணப்பங்களைப் பெற்று, மொத்தப் பயனாளிகளால் அரசுக்கு ஏற்படக் கூடிய நிதிச்சுமையைக் கணக்கிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும் இத்திட்டத்தில், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை இதிலிருந்து விடுவித்து, அவர்களை முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் முழுமையாக முடிவடைந்த பின்னர், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்று இந்தச் செய்திக் குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
