Uncategorized
மனிதாபிமானம் எங்கே போனது…? வாயில்லா ஜீவனை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற நெஞ்சிலா அரக்கன்… வைரல் வீடியோவால் சிக்கினான்
வங்கதேசத்தில் நாய் ஒன்றின் கழுத்தில் செங்கலைக் கட்டி, அதனை ஆற்றில் வீசி கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்காக ஒரு இளைஞர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் வைரலாகப் பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்கு ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், ஒரு இளைஞன் தப்பியோட முயலும் ஒரு நாயைப் பிடித்து, அதன் கழுத்தில் ஒரு கயிற்றால் கனமான செங்கலைக் கட்டுவதைக் காண முடிகிறது. பின்னர், அந்த நாய் தப்பிக்கப் போராடிய போதிலும், சிறிதும் இரக்கமின்றி அதனை அப்படியே தூக்கி ஆற்றில் வீசுகிறான். நாய் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலை அங்கிருந்த மற்றொரு நபர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
A innocent street dog brutually K!lled by Bangladeshi 🇧🇩young men.😡https://t.co/HPquWFSACn
— Musaltaa (@Musaltaa) June 25, 2026
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, விலங்கு நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி குரல் எழுப்பினர். இதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட வங்கதேசப் போலீஸார், நாயை ஆற்றில் வீசிய முக்கிய குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு உடந்தையாக இருந்து வீடியோ எடுத்த மற்றொரு நபரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
