Uncategorized
“இந்தியக் கலாச்சாரம்னா சும்மாவா..?” தாஜ்மஹாலில் சேலை கட்டத் தெரியாமல் தவித்த அர்ஜென்டினா பெண்… ஓடிவந்து உதவிய UP பெண் போலீஸ்… நெஞ்சைத் தொடும் வைரல் காட்சி..!!
அர்ஜென்டினாவில் இருந்து இந்தியாவின் உலக அதிசயமான தாஜ்மஹாலைக்காண வெளிநாட்டுப் பெண் ஒருவர் வந்திருந்தார். இந்தியக் கலாச்சாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் அவர் சேலை அணிந்து வந்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது சேலை அவிழ்ந்து சரிந்துள்ளது. சேலையை மீண்டும் எப்படி சரியாகக் கட்டுவது என்று தெரியாமல் அந்தப் பெண் பொது இடத்தில் மிகுந்த அசௌகரியத்திற்கும் சங்கடத்திற்கும் உள்ளாகியுள்ளார்.
https://twitter.com/Sachingupta/status/2076917024341848202/video/1
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேச காவல்துறை பெண் காவலர் குட்டி தேவி, அந்தப் பெண்ணின் நிலையைக் கவனித்தார். உடனே சற்றும் யோசிக்காமல் அவரிடம் சென்று, அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பொறுமையாகச் சேலையைச் சரியாகக் கட்டிவிட்டு உதவி செய்துள்ளார். பெண் காவலரின் இந்தச் சமயோசிதமான மற்றும் அன்பான செயல், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
