Uncategorized
ஆட்சிக்கு வந்து என்ன சாதிச்சீங்க…? “அறிவிப்போடு நின்ற அதிரடிப்படை…” முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சாடிய டி.டி.வி.தினகரன்…!!
தமிழகத்தில் வயது வித்தியாசமின்றி சிறுமிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை தொடர்ந்து அரங்கேறி வரும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தற்போதைய தவெக ஆட்சி நிர்வாகத்தின் இயலாமையையே காட்டுகிறது என அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மகளிர் பாதுகாப்புக்காகக் கையெழுத்திட்ட முதன்மைத் திட்டங்களில் ஒன்றான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவிக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையையே இன்னும் முழுமையாகத் தொடங்க முடியாத முதலமைச்சர், எவ்வாறு மாநிலத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், புதிய காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமிக்கப்பட்ட பிறகுதான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இங்கு அதிகாரப் போட்டி நிறைந்த ஒரு குதிரை பேர அரசாங்கம் எதற்குத் தேவையற்ற முறையில் செயல்பட வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் தனது பதிவின் மூலம் சாடியுள்ளார்.
