LATEST NEWS
BREAKING: அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர் பாலு…!!
முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் அண்ணாமலை வெளியிட்ட ‘தி.மு.க பைல்ஸ்’ சொத்து பட்டியலில், டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக ரூ.10,000 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவை என்றும் கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு டி.ஆர்.பாலு இந்த அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை இன்று டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுக்கொண்டார். கடந்த விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான டி.ஆர்.பாலுவிடம், அண்ணாமலை நேரடியாகவே தீவிர குறுக்கு விசாரணை நடத்தியிருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை பா.ஜ.க-விலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாலும், மாறியுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த வழக்கினைத் திரும்பப் பெறுவதாக டி.ஆர்.பாலு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
