LATEST NEWS
“அப்படிப்போடு..!” இனி பேச்சுலர்ஸ் குடித்தால் ரூ.5,000 அபராதம்… எங்கு நடக்குது இப்படி ஒரு சட்டம்..? இணையத்தை அதிரவைக்கும் திடுக்கிடும் அறிவிப்பு..!!
போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிரடி பேனர் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது; கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் பொது சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 2 முதல் ஊரில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமணம் ஆனவர்கள் கூட குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்துவிட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கும் அதே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் துணிச்சலான முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது; “இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்” என்ற முழக்கத்துடன் கிராம மக்களே ஒன்றிணைந்து எடுத்துள்ள இந்தச் சமூக சீர்திருத்த நடவடிக்கை, மாநிலம் முழுவதும் உள்ள மற்ற ஊர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் விழிப்புணர்வாகவும் அமைந்துள்ளது.
