LATEST NEWS
“ஐயா… கால்ல வேண்டுறேன், ஒரு மூட்டை கொடுங்க..!” அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழும் விவசாயி.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் கொல்ச்சாரம் மண்டலம் ரங்கம்பேட்டைச் சேர்ந்த வயதான விவசாயி ஒருவர், தமக்கு இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு மூட்டையாவது யூரியா உரம் வழங்குமாறு கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சிய நெஞ்சை உருக்கும் வீடியோ தற்போது பலரையும் உலுக்கியுள்ளது; தெலங்கானா காங்கிரஸ் அரசு உரம் வாங்கும் முறையை முழுவதும் ஒரு கைப்பேசி செயலிக்குமாற்றியுள்ள நிலையில், வயதான காலத்தில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலும், கிராமப் பகுதிகளில் நிலவும் இணைய வசதி இன்மையாலும் இது போன்ற எளிய விவசாயிகள் படும் அவதி இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“I beg you sir, I will touch your feet and pray….please give me two bags of urea.
I don’t have sons, I don’t know how to do it.
Please give me one bag at least sir”!!!
The wailing man is a farmer from Rangampet, Kolcharam Mandal, Medak District, Telangana.
He is begging… pic.twitter.com/8hEoOhD3Fv— Revathi (@revathitweets) August 12, 2026
கைப்பேசியில் அழைப்புகளை மட்டுமே செய்யத் தெரிந்த மூத்த விவசாயிகளைப் பற்றி எந்தவித யோசனையும் இல்லாமல், குளிர்சாதன அறைகளில் அமர்ந்துகொண்டு ‘யூரியா புக்கிங் செயலி’ தான் மிகச் சிறந்த வழி என்று திட்டமிடும் அதிகாரிகளின் ஆடம்பரத் தனமான முடிவுகளால், அன்றாட உழைப்புக்காகவும் விவசாயத்திற்காகவும்கூட விவசாயிகள் இப்படி மண்டியிட்டு அழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது; அரசின் தொழில்நுட்ப மாற்றங்கள் பொதுமக்களுக்கும் பாமர விவசாயிகளுக்கும் எளிய முறையில் சென்றடைவதை உறுதி செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக அமைந்துள்ள இந்தச் சோகச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
