CRIME
ஐயோ கொடுமையே.. திருமண மேடை ஏற வேண்டிய சகோதரன் பிணவறையில்.. கதறி அழுது ராக்கி கட்டிய சகோதரி.. நெட்டிசன்களை கண் கலங்க வைக்கும் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் மனுகுரு பகுதியில், ‘எம்கே’ என்ற ரவுடி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சின்ஹாத்ரி சிவகுமார் என்ற வாலிபர் தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் சில தினங்களில் திருமண மேடை ஏறவிருந்த அந்த வாலிபர், ரக்ஷா பந்தன் பண்டிகை நன்னாளன்றே உயிருக்குப் போராடி மரணத்தின் பிடிக்குள் சிக்கிய துயரம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணக் கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய அந்த இல்லம், ரவுடிகளின் அநாகரிக அராஜக வெறிச்செயலால் தற்போது மரண ஓலமிடும் சுடுகாடாக மாறியுள்ளது நெஞ்சைப் பதறவைத்துள்ளது.
https://twitter.com/pulsenewsbreak/status/2093311975782838778/video/1
ரக்ஷா பந்தன் திருநாளில் தன் சகோதரனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி வாழ்த்த வேண்டிய ஒரு துரதிர்ஷ்டவசமான சகோதரி, அவனது உயிரற்ற ஜடலத்திற்குத் தன் கைகளால் கண்ணீர் மல்க ராக்கி கயிறு கட்டிய நெஞ்சை உலுக்கும் காட்சி ஒட்டுமொத்த தேசத்தையுமே உரைய வைத்துள்ளது. தம்பியின் அசைவற்ற உடலைப் பார்த்து கதறி அழுதபடி, அவன் கையில் ராக்கி கட்டி விடைபெற்ற அந்தச் சகோதரியின் இறுதி அஞ்சலி காட்சி காண்போர் எவரையும் கலங்க வைப்பதாக அமைந்துள்ளது. இக்கொடூரமான கொலையில் தொடர்புடைய எம்கே கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து தூக்கிலிட வேண்டும் எனப் பொதுமக்கள் எக்ஸ் பக்கங்களில் காரசாரமான விவாதங்களை எழுப்பித் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
