CRIME
“அடிப்பாவி.. காதலனுக்கு சொகுசு பைக்…” தந்தையின் நண்பர் வீட்டில் கல்லூரி மாணவி செய்த பகீர் காரியம்.. அடுத்த நிமிடமே எஸ்கேப் ஆன வாலிபர்.. திடுக்கிடும் பின்ணணி..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தனது காதலனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கிக் கொடுப்பதற்காகத் தந்தையின் நண்பர் வீட்டிலிருந்த 9 சவரன் தங்க நகைகளைத் திருடிய கல்லூரி மாணவி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கும் காதலுக்கும் ஆசைப்பட்டு, நம்பிக்கையான நபர் வீட்டிலேயே இந்த இமாலயத் திருட்டுச் சம்பவத்தை அந்த மாணவி அரங்கேற்றியுள்ளார்.
கல்லூரி மாணவி கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நகைகளைப் பெற்றுக்கொண்டு சொகுசு பைக்குடன் ஜாலியாக வலம் வந்த அவரது காதலன் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார். போலீசார் அந்த இளைஞரை அசுர வேகத்தில் சல்லடை போட்டுத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.இன்றைய இளம்தலைமுறையினர் வெறும் பந்தா காட்டுவதற்காகவும், சமூக ஊடகங்களில் ரீல்ஸ் செய்வதற்காகவும் இதுபோன்ற விபரீதமான குற்றச் செயல்களில் இறங்குவது பெற்றோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மாபெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
