CRIME
ஐயோ கடவுளே.. 18 வயது பெண்ணை அலற அலற உயிரோடு எரித்த கொடூரம்! தியோராலா “சதி” சம்பவத்தின் பின்னணியில் இருந்த பகீர் உண்மை.. நெஞ்சை உறைய வைக்கும் நரகக் கொடுமை..!!
கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் தியோராலாவில் 18 வயது இளம் பெண் ரூப் கன்வர் தனது கணவனின் சிதையோடு சேர்த்து உயிரோடு எரிக்கப்பட்ட கொடூர வரலாற்றுச் சம்பவம், “சதி” என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட மாபெரும் சொத்து வெறி மற்றும் மதவாத வியாபாரத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. திருமணமாகி எட்டே மாதங்களில் அவளது கணவர் கடுமையான குடல் அலற்சி நோயால் உயிரிழந்த அடுத்த நாளே இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கிராம மக்கள் அவள் பட்டுப் புடவை உடுத்தி, புன்னகையுடன் வந்து கணவனின் தலையைத் மடியில் வைத்துக்கொண்டு சிதையில் அமர்ந்ததாகப் புனைக்கதைகளைக் கட்டியமைத்தனர். ஆனால், புலனாய்வு செய்த பத்திரிகையாளர்கள் அவள் பயந்துபோய் ஒரு கொட்டகையில் ஒளிந்திருந்ததாகவும், அங்கிருந்து அவளைக் கட்டாயமாக இழுத்து வந்து, வாயில் நுரை தள்ள அலற அலறச் சிதையில் தள்ளிய கொடூரத்தை வெளிக்கொண்டு வந்தனர். அவள் தீயின் உஷ்ணம் தாங்காமல் சிதையிலிருந்து தப்பிக்க முயன்ற போது, அங்கிருந்த மரக்கட்டைகளாலும், சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான கூட்டத்தாராலும் அவள் வலுக்கட்டாயமாக அமுக்கிப் பிடிக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டாள்.
https://twitter.com/plot_twistttt/status/2095438625454624793/photo/1
அவள் விதவையாக உயிரோடு வாழ்ந்திருந்தால், அவளது புகுந்த வீட்டினர் அவளது சீதனமாக வந்த தங்கம், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் ரொக்கப் பணத்தைத் திரும்பத் தர வேண்டியிருந்திருக்கும். அவளை ஒரு “தெய்வமாக” மாற்றி எரித்ததன் மூலம், அந்தச் சீதனப் பொருட்களைத் தங்களுக்குள்ளேயே சுருட்டிக்கொண்டதுடன், அந்த இடத்தை ஒரு ஆன்மீகத் தலமாகவும் மாற்றினர். அங்கு ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டி, அவளது புகைப்படங்களை விற்று, லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்து மாபெரும் பிசினஸ் செய்தனர்; இதற்குப் பல அரசியல்வாதிகளும் முட்டுக் குடுத்துப் பேசினர். இச்சம்பவத்திற்குப் பிறகு “சதி ஒழிப்பு மற்றும் சதி மகிமைப்படுத்துதல் தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டு, கொலை மற்றும் தூண்டுதல் குற்றச்சாட்டுகளின் கீழ் 45 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் விதியின் கொடூர ஆட்டமாக, கடந்த 37 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் 2024-ஆம் ஆண்டின் இறுதி விடுதலைகள் உட்பட, குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்குக் கூடத் தண்டனை கிடைக்காமல் அனைவரும் சுத்தமாக வெளியே நடந்து வந்தனர். ஆண் இறந்தால் பெண் சிதையேற வேண்டும் என்ற இந்த ஆணாதிக்கச் சட்டம், ஒருவேளை தலைகீழாக மாறி பெண் இறந்தால் ஆண் சிதையேற வேண்டும் என்று இருந்திருந்தால், இந்த வழக்கம் அன்றைய தினமே அடியோடு ஒழிந்திருக்கும் என்பதே கசப்பான வாழ்வியல் உண்மை.
