CRIME
“நான் 7 மாத கர்ப்பம்”… திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்… வாக்கு கொடுத்துவிட்டு… கதற வைத்த சேலம் கோகிலா கொலை வழக்கு.. தலைமறைவான காதலன் அம்மாசிக்கு போலிஸ் வலைவீச்சு..!!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம், கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கோகிலா (23) என்ற 23 வயது இளம் பட்டதாரிப் பெண் என்பது காவல் துறையினரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த கோகிலாவிற்குத் திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் 7 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சித் தகவல் கடந்த மாதம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்தபோது, பக்கத்து ஊரைச் சேர்ந்த அம்மாசி (26) என்ற 26 வயது இளைஞருடன் கோகிலாவிற்குப் பழக்கம் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கோகிலாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊர் திருவிழா முடிந்தவுடன் கோகிலாவைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அம்மாசி, அதுவரை கோகிலாவைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கோகிலாவைக் காணவில்லை என்று அம்மாசி தரப்பில் இருந்து பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத சூழலில், தற்போது கோகிலா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் சடலமாகக் கிணற்றில் வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாகக் கொங்கணாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அம்மாசியைத் தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
