Uncategorized
நடுங்கும் உலக நாடுகள்..!”ஈரான் அழியும், 1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு” படுகொலை மிரட்டலுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி உத்தரவு…!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டால், அந்நாட்டை முற்றிலும் அழிப்பதற்காக 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, டிரம்பைக் கொலை செய்வோம் என அந்நாட்டு மக்கள் பகிரங்கமாக முழக்கமிட்டதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த அதிரடி மிரட்டலை விடுத்துள்ளார்.
தன்னையோ அல்லது பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபரையோ குறிவைத்து ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்த முயன்றால், அதற்குப் பதிலடியாக ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் தரைமட்டமாக்கி, முற்றிலும் அழிக்க அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்கனவே ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அமெரிக்கப் படைகள் முழுத் திறனுடன் தயாராக உள்ளதாகவும், இந்த ராணுவத் தயாரிப்பு நிலை அடுத்த ஓராண்டு காலத்திற்கு (தேவைப்படின் நீட்டிக்கப்படும்) நீடிக்கும் என்றும் அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேச வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஈரான் மறுத்து வருவதால் பதற்றம் உச்சமடைந்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபருக்கு விடுக்கப்பட்ட நேரடி கொலை மிரட்டலுக்கு டிரம்ப் அளித்துள்ள இந்த 1,000 ஏவுகணை பதிலடி எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
