LATEST NEWS
அடடே…. என்ன ஒரு ஆச்சரியம்… நான்கு கால்களுடன் வந்த அதிசயக் கோழி… இறைச்சிக் கடையில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு….!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் ஜாசிம் என்பவரின் கடைக்கு, மன்னார்காடு பகுதியிலிருந்து விற்பனைக்காகக் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அவ்வாறு வந்த கோழிகளில் ஒரு கோழிக்கு வழக்கத்திற்கு மாறாக 4 கால்கள் இருந்ததைக் கண்டு ஜாசிம் பெரும் வியப்படைந்தார். அந்த விசித்திரக் கோழியின் உடல் அமைப்பில் இரண்டு கால்கள் நீளமாகவும், மற்ற இரண்டு கால்கள் சற்றுச் சிறியதாகவும் காணப்பட்டன. இருப்பினும், அந்தப் பறவை நடக்கும் போது அதன் பின்பகுதியில் அமைந்துள்ள இரண்டு சிறிய கால்களும் தரையைத் தொடுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த அபூர்வமான நான்கு கால் கோழியைப் பற்றிய தகவல் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியதால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கடைக்கு வந்து அதனைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். இறைச்சி விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட போதிலும், இந்த அதிசயக் கோழியைத் தான் யாருக்கும் விற்கப் போவதில்லை என்றும், அதனைத் தன்னிடமே வளர்க்கப் போவதாகவும் கடையின் உரிமையாளர் ஜாசிம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
