LATEST NEWS
“பாஜக டூ புதிய பாதை..!” ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை… “உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு…” ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அதிரடி கணிப்பு….!!
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். அண்ணாமலையின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதான பற்று மற்றும் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை மிக உயர்ந்த இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட பவன் கல்யாண், அவர் தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழக அரசியலில் அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.விலிருந்து விலகித் தனக்கான புதிய பாதையை வகுக்கும் அண்ணாமலையின் முடிவை மனதார மதிப்பதாகவும், அவரைப் போன்ற நேர்மையானவர்கள் தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து நீடித்துச் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் புதிய அரசியல் பாதையை உருவாக்கி, இளம் தலைமுறையினரின் பேராதரவோடு தற்போதைய முதலமைச்சராக அரியணையில் அமர்ந்துள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தமிழகத்தின் புதிய சக்தியாக உருவெடுத்து வந்த அண்ணாமலையும் தற்போது பா.ஜ.க.விலிருந்து விலகிப் புதியதொரு கட்சியைத் தொடங்க உள்ளார். பவன் கல்யாண் போன்ற அண்டை மாநிலத் தலைவர்களின் ஆதரவோடு, அண்ணாமலை தனது சொந்தப் பாதையில் புதிய அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
