LATEST NEWS
ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய ரூல்ஸ்.. இலவச அரிசி திட்டத்தில் அதிரடி மாற்றம்..!!
மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கான விதிகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, தகுதியான பயனாளிகளுக்கு ஒருவருக்கு 7 கிலோ வரை இலவச அரிசி வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த புதிய விதியால் தகுதியுள்ள நுகர்வோர்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் பலன்களைப் பெற ரேஷன் தொடர்பான சரிபார்ப்பு மற்றும் ஆவணப் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயனாளிகள் தங்களது விவரங்களை வரும் ஜூலை 13-க்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்யாதவர்கள் புதிய சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், உரிய நேரத்திற்குள் விவரங்களைச் சரிபார்ப்பது முக்கியமாகும்.
