LATEST NEWS
4 மாதங்களாக நீடிக்கும் மர்மம்..! வான்வழித் தாக்குதலில் முகம் சிதைந்ததா..? தந்தை அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பாரா மொஜ்தபா கமேனி… வெளியான பரபரப்பு தகவல்கள்..!!
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முந்தைய உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்த அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது இரண்டாவது மகனான 56 வயது மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால், அவர் பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியும், இதுவரை அவர் ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றவில்லை என்பது உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதற்குக் காரணம், தனது தந்தை கொல்லப்பட்ட அதே வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்தார் என்று கூறப்படுகிறது. அவரது முகம் சிதைந்ததோடு கை, கால்களிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், அவர் இறந்துவிட்டதாகக் கூட வதந்திகள் பரவின. ஆனால், ஈரான் அரசு இதனை மறுத்ததோடு, அவரது பெயரில் அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் வெளியிட்டது. அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நம்பப்படும் சூழலில், ஜூலை 4 முதல் 9 வரை நடைபெற உள்ள அவரது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் அவர் நேரில் பங்கேற்பாரா என்ற புதிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி, ஈராக்கின் புனிதத் தலங்கள் வழியாகச் சென்று, அலி கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் இந்த இறுதி ஊர்வலம் நிறைவடைய உள்ளது. இந்த நிகழ்வில் மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றினால், அவரது உடல்நிலை மற்றும் ஈரானின் தலைமைத்துவம் குறித்து எழுந்துள்ள பல்வேறு மர்மங்களுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும், அவரது வருகை ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து ஈரான் நாட்டிற்கு கூடுதல் பலத்தைத் தருவதோடு, எதிரி நாடுகளுக்கு ஒரு சவாலாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
