CRIME
“என் கூட வரலனா… கல்யாணமே நடக்க விடமாட்டேன்..!” 12-ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி போலி போட்டோக்களைப் பரப்பிய வாலிபர்..! இவர்களுக்கு தண்டனையே கிடையாதா..?!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பித்ரி செயின்பூர் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த சர்வன் பட்டேல் என்ற இளைஞரால் தொடர்ந்து தொல்லைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்த இளைஞர் மாணவியின் புகைப்படங்களைத் தவறாக எடிட் செய்து, சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் ரீல்ஸ்களாகப் பதிவேற்றி வைரலாக்கி வந்துள்ளார்.
வழியில் செல்லும்போது மாணவியை மறித்துத் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியதாகவும், எதிர்த்தபோது மிரட்டல் விடுத்ததுடன் அவருக்குத் திருமணம் நடக்க விடமாட்டேன் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இந்தத் தொடர் அவதூறு மற்றும் அச்சுறுத்தல்களால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பயத்தின் காரணமாகத் தனது 12-ஆம் வகுப்புப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பித்ரி செயின்பூர் காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட சர்வன் பட்டேல் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வரும் போலீசார், சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட போலிப் படங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
