LATEST NEWS
அடுத்த டார்கெட் செந்தில் பாலாஜி..? DVAC வலையில் சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்… டார்கெட் லிஸ்ட் ரெடி…!!!
மின்சாரத்துறை அமைச்சர் EV வேலுவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தங்களது அடுத்த இலக்காக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இவரது சகோதரர் அசோக் குமாரை கைது செய்ய கரூர் போலீஸார் தீவிரமாக முயன்று வரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியிலேயே அமலாக்கத்துறையால் (ED) கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, அரசியல் ரீதியாக இது மற்றுமொரு பெரிய அடியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அடுத்தடுத்த இலக்குகளாக இருக்கும் அமைச்சர்கள்
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்த மேலும் சில முக்கியப் புள்ளிகளும் லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சேகர் பாபு ஆகியோரின் பெயர்களும் இந்த இலக்கு பட்டியலில் (Target list) இடம்பெற்றுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
