LATEST NEWS
அதிமுகவில் அடுத்தடுத்து ஷாக்.. மேலும் 3 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா..? எடப்பாடி தலையில் விழுந்த பேரிடி…!!
தமிழகத்தில் இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக, சி.வி.சண்முகம் (மயிலம்), ஆர்.ராகேஷ் (சங்கராபுரம்) மற்றும் மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிபட்டி) ஆகிய மேலும் மூன்று அதிமுக எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தீவிரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவர்கள் மூவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தங்களது ராஜினாமா கடிதங்களை முறைப்படி சபாநாயகரிடம் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ராஜினாமாக்கள் இறுதி செய்யும்பட்சத்தில், ஏற்கனவே காலியாக இருக்கும் தொகுதிகளுடன் சேர்த்து, தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள ஒட்டுமொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும் என்று தெரிகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பானதொரு சூழல் நிலவி வருகிறது.
