LATEST NEWS
தமிழகமே ஷாக்..! அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண்களின் ஆபாச நடனம்… சர்ச்சையை கிளப்பிய வீடியோ… விஜய் கட்சிக்கு அடுத்த சிக்கல்…!!
திருப்பூரில் ரோட்டரி சங்கம் சார்பில் தன்னார்வலர்களுக்கான பாசறை நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை KAS தொடங்கி வைக்க, கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றினார். ஆனால், இந்த நிகழ்வின் இறுதியில் பெண்களின் ஆபாச நடனம் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நிறைவடையும் தருவாயில், அங்கிருந்த ‘மனமகிழ் மன்றத்தில்’ தான் இந்த ஆபாசக் கூத்து மற்றும் நடன நிகழ்வுகள் அரங்கேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற மது விருந்தில் விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் தள்ளாடியபடி தத்தளித்த காட்சிகளும், அங்கு நடந்த பிற சம்பவங்களின் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகின்றன.
